உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து ... தொடர்ச்சி - 4 ... 26. வென்றிச் சிறப்பு
தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா; களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா; மத்து உரறிய மனை இன் இயம் இமிழா; ஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்- நோகோ யானே-நோதக வருமே! 5 பெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று, 'வலம் இன்று அம்ம, காலையது பண்பு!' என, கண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ, மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர, பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக் 10 காடுறு கடு நெறி ஆக மன்னிய- முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர், உரும்பு இல் கூற்றத்து அன்ன, நின் திருந்து தொழில், வயவர் சீறிய நாடே. துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : காடுறு கடு நெறி 27. வென்றிச் சிறப்பு
சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்- தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி, அலர்ந்த ஆம்பல் அக மடிவையர், சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி அரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர், 5 துறை நணி மருதம் ஏறி, தெறுமார், எல் வளை மகளிர் தெளி விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும்; பொய்கை வாயிற் புனல் பொரு புதவின், நெய்தல் மரபின், நிரை கள், செறுவின் 10 வல் வாய் உருளி கதுமென மண்ட, அள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப, நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை அல்லது, பூசல் அறியா நல் நாட்டு 15 யாணர் அறாஅக் காமரு கவினே! துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தொடர்ந்த குவளை 28. நாடு காத்தற் சிறப்பு
திரு உடைத்து அம்ம-பெரு விறற் பகைவர் பைங் கண் யானைப் புணர் நிரை துமிய, உரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால், கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து, விளைவு முட்டுறாது, 5 புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின். விடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய- கோடை நீட, குன்றம் புல்லென, அருவி அற்ற பெரு வறற் காலையும்; நிவந்து கரை இழிதரும் நனந் தலைப் பேரியாற்றுச் 10 சீருடை வியன் புலம்-வாய் பரந்து மிகீஇயர், உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச் செந் நீர்ப் பூசல் அல்லது, வெம்மை அரிது, நின் அகன் தலை நாடே. துறை : நாடு வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : உருத்து வரு மலிர் நிறை 29. வென்றிச் சிறப்பு
அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி, வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும், முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த தடந் தாள் நாரை இரிய; அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், 5 வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும், அழியா விழவின், இழியாத் திவவின், வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ, மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும் அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய!- 10 விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட மயிர் புதை மாக் கண் கடிய கழற, அமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும் பெரும் பல் யானைக் குட்டுவன் வரம்பு இல் தானை பரவா ஆங்கே. 15 துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வெண் கை மகளிர் 30. வென்றிச் சிறப்பு
இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை, மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல் பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும் அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை, 5 தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல, இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் தண் கடற் படப்பை மென்பாலனவும்; காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர் செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட 10 மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு, பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும் குன்று தலைமணந்த புன் புல வைப்பும்; காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது, அரி கால் அவித்து, பல பூ விழவின்- 15 தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று, வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும் பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச் சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம் முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் 20 செழும் பல் வைப்பின்-பழனப் பாலும்; ஏனல் உழவர் வரகுமீது இட்ட கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை, மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்; 25 பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி, அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு, ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்; பணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து, 30 கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க, முரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர, கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து அருந் திறல் மரபின் கடவுள் பேணியர், உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறற் பிண்டம் 35 கருங் கட் பேய்மகள் கை புடையூஉ நடுங்க, நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி, எறும்பும் மூசா இறும்பூது மரபின், கருங் கட் காக்கையொடு பருந்து இருந்து ஆர; ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால், 40 பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து, பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்- கடுஞ் சின வேந்தே!-நின் தழங்கு குரல் முரசே. துறை : பெருஞ்சோற்று நிலை
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புகன்ற ஆயம் பதிகம்
இமையவரம்பன் தம்பி அமைவர உம்பற்காட்டைத் தன் கோல் நிறீஇ, அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு, மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ, கண் அகன் வைப்பின் மண் வகுத்து ஈத்து, 5 கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி, இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி, அயிரை பரைஇ, ஆற்றல் சால் முன்போடு ஒடுங்கா நல் இசை, உயர்ந்த கேள்வி, நெடும்பாரதாயனார் முந்துற, காடு போந்த 10 பல் யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப் பாட்டு. அவைதாம்: அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த காஞ்சி,
சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு கடு நெறி, தொடர்ந்த
குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண் கை மகளிர், புகன்ற ஆயம்: இவை
பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: 'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார். இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். மூன்றாம் பத்து முற்றும்
|