உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
திருத்தக்கதேவர் அருளிய சீவக சிந்தாமணி ... தொடர்ச்சி - 5 ... சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும் விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப வேழ வெந்தீயின் நீங்கி இருந்தனன் ஏம முந் நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல் கரும்பு உடைக் காளை அன்ன காளை நின் வலைப் பட்டு என்றான். 401 நிலம் பொறுக்கலாத செம் பொன் நீள் நிதி நுந்தை இல்லம் நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம் உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன் கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னைக் கண்டேன். 402 ஐயனைக் கண்ணில் காண யானைத்தீ அதகம் கண்ட பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கித் தெய்வம் கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல் மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன். 403 கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய் கேட்டு அளப் பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னைச் சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான். 404 அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல் கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே தாள் இயல் தவங்கள் தாயாத் தந்தை நீ ஆகி என்னை வாள் இயங்கு உருவப் பூணோய் படைத்தனை வாழி என்ன மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான். 405 மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால் பிற அறம் அல்ல பேசார் பேர் அறிவு உடைய நீரார் துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான் நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான். 406 கை வரை அன்றி நில்லாக் கடுஞ் சின மடங்கல் அன்னான் தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதிச் செம்பொன் பை விரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும் மை வரை மார்பினாற்கும் மனம் உறத் தேற்றி இட்டான். 407 அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள் குழல் உறு கிளவி சோர்ந்து குமரனைத் தமியன் ஆக நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான் பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான். 408 நாமகள் இலம்பகம் முற்றியது
கோவிந்தையார் இலம்பகம் அச்சணந்தி பிறவி நீத்தல் ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய் வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின் மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச் சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான். 409 சீவகன் குமரன் ஆதல் நம்பன் இத் தலை நாக நல் நகர் பைம் பொன் ஓடை சூழ் பரும யானையும் செம் பொன் நீள் கொடித் தேரும் வாசியும் வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே. 410 கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும் சிலையினது அகலமும் வீணைச் செல்வமும் மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ் உலகினில் இலை என ஒருவன் ஆயினான். 411 நாம வென்றி வேல் நகை கொள் மார்பனைக் காமனே எனக் கன்னி மங்கையர் தாமரைக் கணால் பருகத் தாழ்ந்து உலாம் கோ மகன் திறத்து உற்ற கூறுவாம். 412 வேடர்கள் ஆநிரை கவர எண்ணுதல் சில்அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம் முல்லை கார் எனப் பூப்ப மொய்ந்நிரை புல்லு கன்று உளிப் பொழிந்து பால் படும் கல் என் சும்மை ஓர் கடலின் மிக்கதே. 413 மிக்க நாளினால் வேழம் மும் மதம் உக்க தேனினோடு ஊறி வார் சுனை ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல் மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார். 414 வேடர்கள் நிமித்தகனை இகழ்ந்து ஆநிரை கவர எண்ணுதல் மன்னவன் நிரை வந்து கண் உறும் இன்ன நாளினால் கோடும் நாம் எனச் சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல் முன்னம் கூறினான் முது உணர்வினான். 415 அடைதும் நாம் நிரை அடைந்த காலையே குடையும் பிச்சமும் ஒழியக் கோன் படை உடையும் பின்னரே ஒருவன் தேரினால் உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே. 416 என்று கூறலும் 'ஏழை வேட்டுவீர் ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே என்று கூறினும் ஒருவன் என் செயும் இன்று கோடும் நாம் எழுக' என்று ஏகினார். 417 வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர் தொண்டகப் பறை துடியோடு ஆர்த்து எழ விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என மண்டினார் நிரை மணந்த காலையே. 418 தீங்கு கருதி ஆயர், காவலுக்குச் செல்லுதல் பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார் ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான் கோத்த நித்திலக் கோதை மார்பினான் வாய்த்த அந் நிரை வள்ளுவன் சொனான். 419 பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால் எள்ளன்மின் நிரை இன்று நீர் என வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார் முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார். 420 வேடர்கள் ஆநிரை கவர்தல் காய மீன் எனக் கலந்து கான் நிரை மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன் பாய மாரிபோல் பகழி சிந்தினார் ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார். 421 குழலும் நவியமும் ஒழியக் கோவலர் சுழலக் காடு போய்க் கன்று தாம்பு அரிந்து உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள் மழலைத் தீம் சொல்லார் மறுக வாய் விட்டார். 422 மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர் அத்தலை விடின் இத்தலை விடார் உய்த்தனர் என உடை தயிர்ப் புளி மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார். 423 வலைப் படு மான் என மஞ்ஞை எனத் தம் முலைப் படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த தலைப் படு தண் மலர் மாலை பிணங்க அலைத்த வயிற்றினர் ஆய் அழுதிட்டார். 424 எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர் நும் அனைமார்களை நோவ அதுக்கி வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ எனத் தம் மனைக் கன்றொடு தாம் புலம்பு உற்றார். 425 பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது ஆறு மடப் பள்ளி ஆகுலம் ஆக மாறு பட மலைந்து ஆய்ப்படை நெக்கது சேறு படு மலர் சிந்த விரைந்தே. 426 கட்டியங்காரனுக்கு ஆயர்கள் செய்தி உணர்த்தல் புறவு அணி பூ விரி புன் புலம் போகி நறவு அணி தாமரை நாட்டகம் நீந்திச் சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர் இறை அணிக் கேட்க உய்த்திட்டனர் பூசல். 427 கொடு மர எயினர் ஈண்டிக் கோட்டு இமில் ஏறு சூழ்ந்த படு மணி நிரையை வாரிப் பைந் துகில் அருவி நெற்றி நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே. 428 காசு இல் மா மணிச் சாமரை கன்னியர் வீசு மா மகரக் குழை வில் இட வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான். 429 கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு சண்ட மன்னனைத் தாள் தொழுது ஆயிடை உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் எனக் கொண்டனர் நிரை போற்று எனக் கூறினான். 430 கட்டியங்காரன் படை தோல்வியுறல் செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம் வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச் செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள் அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான். 431 கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக் காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன் ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே. 432 கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம் போர் விளை இவுளித் திண் தேர் புனைமயிர்ப் புரவி காலாள் வார் விளை முரசம் விம்ம வான் உலாப் போந்ததே போல் நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே. 433 கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததே போல் வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க வால் வளை அலற வாய் விட்டு இரலையும் துடியும் ஆர்ப்பப் பால் வளைந்து இரவு செற்றுப் பகலொடு மலைவது ஒத்தார். 434 வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனைப் பகழி மைந்தர் மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைகச் செந்நாச் சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றிக் கொல் பழுத்து எரியும் வேலார் கொடுஞ் சிலை குழைவித்தாரே. 435 வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கிக் கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனைப் பகழி தம்மால் வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர் பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவது ஒத்தே. 436 வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடைப் படுத்து என்று எண்ணி ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல் பொன் தவழ் களிறு பாய்மா புன மயில் குஞ்சி பிச்சம் மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே. 437 பல்லினால் சுகிர்ந்த நாரில் பனிமலர் பயிலப் பெய்த முல்லை அம் கண்ணி சிந்தக் கால் விசை முறுக்கி ஆயர் ஒல் என ஒலிப்ப ஓடிப் படை உடைந்திட்டது என்ன அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங் காரன் ஆழ்ந்தான். 438 வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலைத் தேன் சோர் கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழுங் கயல் தடங் கண் போலும் அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார் செம்பு கொண்டு அன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ என்றார். 439 நந்தகோன், நிரை மீட்பாருக்குத் தன் மகளை மணம்புரிந்து தருவதாக முரசு அறைதல் மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள்கண் பொன் இழை சுடரும் மேனிப் பூங் கொடி அனைய பொற்பில் கன்னியைத் தருதும் என்று கடி முரசு இயம்பக் கொட்டி நல் நகர் வீதி தோறும் நந்த கோன் அறை வித்தானே. 440 சீவகன் போருக்கு எழுதல் வெதிர்ங் குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும் கருந் தடங் கண்ணி அன்றிக் காயம் ஆறு ஆக ஏகும் அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார். 441 கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சி னோடும் தேர் பரி கடாவித் தேம் தார்ச் சீவகன் அருளில் போகித் தார் பொலி புரவி வட்டம் தான் புகக் காட்டு கின்றாற்கு ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே. 442 தன் பால் மனையாள் அயலான் தலைக் கண்டு பின்னும் இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம் நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான். 443 போர்ப் பண் அமைத்து நுகம் பூட்டிப் புரவி பண்ணித் தேர்ப் பண் அமைத்துச் சிலை கோலிப் பகழி ஆய்ந்து கார்க் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில் பார்க் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே. 444 நிமித்திகன் வேடரைத் தடுத்தல் இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்கண் நோக்கின் பழுது இன்றி மூழ்கும் பகழித் தொழில் வல்ல காளை முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும் பொழுது அன்று போதும் எனப் புள் மொழிந்தான் மொழிந்தான். 445 நிமித்திகன் சொல்லை ஏற்காது வேடர் போரிடச் செல்லுதல் மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியது உண்டேல் காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகம் போல் வேட்டு அந் நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே. 446 சீவகன் வேடர்களுடன் போரிடுதல் கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து இடைப் படாது ஓடிப் போமின் உய்ய என்று இரலை வாய் வைத்து எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும் கடத்து இடை முழங்கக் காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே. 447 கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம் ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார் மொய் அமர் நாள் செய்து ஐயன் முதல் விளையாடினானே. 448 வேடர்கள் போரில் தோற்று ஓடுதல் ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக் கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார். 449 புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான் வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே. 450 மால் வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னை கால் இரைத்து எழுந்து பாறக் கல் எனப் புடைத்ததே போல் மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே. 451 கானவர் இரிய வில்வாய்க் கடுங் கணை தொடுத்தலோடும் ஆன்நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள் தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி போல் நின்ற என்ப மற்று அப் பொருவரு சிலையினார்க்கே. 452 ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர் மெய்ந் நூறு நூறு நுதி வெம் கணை தூவி வேடர் கைந் நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின் மைந் நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார். 453 வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றிக் கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன் தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான் நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான். 454 ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழ ரோடும் கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற வாள் உற்ற புண்ணுள் வடி வேல் எறிந்திற்றதே போல் நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே. 455 சீவகன் ஆநிரை மீட்டு வருதலும், நகர மாந்தர் மகிழ்ச்சியும் இரவி தோய் கொடி கொள் மாடத்து இடுபுகை தவழச் சுண்ணம் விரவிப் பூந் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற புரவித் தேர்க் காளை அன்ன காளையைப் பொலிக என்றார். 456 இன் அமுது அனைய செவ்வாய் இளங் கிளி மழலை அம் சொல் பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம் மின் இவர் நுசுப்பு நோவ விடலையைக் காண ஓடி அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார். 457 சில்லரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொன் அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி நெல் எழில் நெடுங் கண் அம்பாப் புருவவில் உருவக் கோலிச் செல்வப் போர்க் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே. 458 நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கிக் கால் பரந்து இருந்த வெம்கண் கதிர் முலை கச்சின் வீக்கிக் கோல் பொரச் சிவந்த கோல மணிவிரல் கோதை தாங்கி மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார். 459 ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கிப் போகமும் பொருளும் ஈன்ற புணர் முலைத் தடங்கல் தோன்றப் பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங் கண் நல்லார் நாகம் விட்டு எழுந்து போந்த நாகர் தம் மகளிர் ஒத்தார். 460 வாள் அரம் துடைத்த வைவேல் இரண்டு உடன் மலைந்தவே போல் ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம் நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல் காளைதன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே. 461 வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும் கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர் இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல் பட அரவு அல்குலாரைப் பயந்தன மாடம் எல்லாம். 462 மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறிப் போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார் தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண் என் தாது உகு பிணையல் வீசிச் சாந்து கொண்டு எறிந்து நிற்பார். 463 கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்ப் படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல் நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்கண் கண்டாம் தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார். 464 செம்மலைப் பயந்த நல் தாய் செய்தவம் உடையாள் என்பார் எம் மலைத் தவம் செய்தாள் கொல் எய்துவம் யாமும் என்பார் அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித் தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார். 465 சினவுநர்க் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளைக் கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார் மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும் வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும். 466 விண் அகத்து உளர் கொல் மற்று இவ் வென்றி வேல் குருசில் ஒப்பார் மண் அகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல் பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி அண்ணலைத் தவத்தில் தந்தார் யார் கொலோ அளியர் என்பார். 467 வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணி நலம் கருகிக் காமக் கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார். 468 வார் செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது தோள் தூக்க இப்பால் பார் செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன் தேர் செலச் செல்லும் வீதி பீர் செலச் செல்லும் அன்றே. 469 வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த் தடங்கண் கோட்டித் தோள் முதல் பசலை தீரத் தோன்றலைப் பருகுவார் போல் நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான் கோள் முகப் புலியோடு ஒப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான். 470 பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க மன்னுக வென்றி என்று மணிவள்ளம் நிறைய ஆக்கி இன்மதுப் பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி மின் உகு செம் பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே. 471 இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டிப் பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார். 472 தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர் கொண்டு புக்குக் காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையைக் காவல் ஓம்பி ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிரச் செங் கணான்தன் சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார். 473 நந்தகோன் தன் வரலாறு கூறித் தன் மகள் கோவிந்தையை மணக்க சீவகனை வேண்டல் தகை மதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண் புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட வகை மலி வரை செய் மார்பின் வள்ளலைக் கண்டு வண் தார்த் தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும். 474 கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை வேட்டு இறைப் பாரம் எல்லாம் கட்டியங் காரன் தன்னைப் பூட்டி மற்று அவன் தனாலே பொறி முதல் அடர்க்கப் பட்டான். 475 கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறிக் கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கருந் தலை களையல் உற்றேன் மால் வழி உளது அன்று ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன். 476 குலத் தொடு முடிந்த கோன்தன் குடி வழி வாரா நின்றேன் நலத் தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன் இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள். 477 வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம் அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்பக் கொம்படு நுசுப்பினாளைக் குறை இரந்து உழந்து நின்ற நம்படை தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன். 478 பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல் சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான். 479 வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள் உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள் வண்ண வனமுலை மாதர் மட நோக்கி கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய். 480 சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும் பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய் போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான். 481 குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன் நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே. 482 பதுமுகனுக்கு மணம்புரிவிக்க, சீவகன் இசைந்து கோவிந்தையை ஏற்றல் கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம் முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப் பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார் இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே. 483 கோட்டு இளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி மோட்டுஇள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான் சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான். 484 தேன் சொரி முல்லைக் கண்ணிச் செந் துவர் ஆடை ஆயர் கோன் பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க் கான் சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக என்றான். 485 கனிவளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன் குனி வளர் சிலையைக் கொன்ற குவளைக் கண் கயலைக் கொன்ற இனி உளர் அல்லர் ஆயர் எனச் சிலம்பு அரற்றத் தந்து பனி வளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். 486 நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து ஊழி தொறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று தாழ் இரும் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆயத்தியர் ஆட்டினாரே. 487 நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக் குழையும் நீவி மை விரி குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப் பெய்தனர் பிணையல் மாலை ஓரிலைச் சாந்து பூசிச் செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார். 488 ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச் சாறு எங்கும் அயரப் புக்கு நந்தகோன் தன்கை ஏந்தி வீறு உயர் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான் பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே. 489 பதுமுகன் இன்பம் நுகர்தல் நலத் தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன்பொன் இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால் அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க முலைக் குவட்டு இடைப் பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே. 490 கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன வாகி வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண் விரை நாறு கோதை முள்வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்திக் கொள்ளாத இன்பக் கடல் பட்டனன் கோதை வேலான். 491 தீம் பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து தேவர் தாம் பால் படுத்த அமிர்தோ? தட மாலை வேய்த் தோள் ஆம் பால் குடவர் மகளோ? என்று அரிவை நைய ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே. 492 கோவிந்தையார் இலம்பகம் முற்றியது 3. காந்தருவ தத்தையார் இலம்பகம் இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச் சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன் பொங்குதிரை மீதுபொரு மால்களிறு போன்றோர் வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான். 493. மின்னொழுகு சாயன்மிகு பூட்பதுமை கேள்வன் கொன்னொழுகு வேலியவ தத்தன்குளிர் தூங்குந் தன்வழிய காளைச் தத்தனவன் றன்போற் பொன்னொழுகு குன்றிலுறை போர்ப்புலியோ டொப்பான். 494 இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக் கம்மியரு மூர்வர்களி றோடைநுதல் சூட்டி யம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென் றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே. 495 உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லை தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பி னெள்ளுநர்கட் கேக்கழுத்தம் போல வினிதன்றே. 496 செய்க பொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கு மெஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணு மையமிலை யின்பமற னோடெவையு மாக்கும் பொய்யில்பொரு ளெபொருண்மற் றல்லபிற பொருளே. 497 தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன வோங்குகுல நையவத னுட்பிறந்த வீரர் தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொ னீங்கல்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான். 498 மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றி மாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்ற தாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன் கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான். 499 வானமுற நீண்டபுகழ் மாரிமழை வள்ள றானமென வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி நானமிக நாறுகமழ் குஞ்சியவ னேறி யூனமெனு மின்றியினி தோடுகவி தென்றான். 500 |