உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பதினொன்றாந் திருமுறை சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கைலாய ஞான உலா கலிவெண்பா திருச்சிற்றம்பலம் திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா(து) அங்கண் அருமால் உற;அழலாய் நின்ற - பெருமான் 1 பிறவாதே தோன்றினான்; காணாதே காண்பான்; துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் 2 ஆழாதே ஆழ்ந்தான்; அகலா(து) அகலியான்; ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல் 3 ஓதா துணர்ந்தான்; நுணுகாது நுண்ணியான் யாதும்அணுகா துஅணுகியான்; - ஆதி 4 அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான்; அரனாய் அழிப்பவனுந் தானே - பரனாய 5 தேவர் அறியாத தோற்றத்தான்; தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான்; - ஓவாதே 6 எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்; - எவ்வுருவும் 7 தானேயாய் நின்றளிப்பான்; தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான்; - ஆனாத 8 சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப - ஆராய்ந்து 9 செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப - அங்கொருநாள் 10 இறைவன் கோலம் கொள்ளல் பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை, நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள் 11 ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப - ஊனமில்சீர் 12 நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தாவ்13 வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள் 14 குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு தலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த 15 கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும் 16 சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா 17 மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்(கு) அணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய 18 ஆரம்அவைபூண்(டு) அணிதிக ழும்சன்ன வீரந் திருமார்பில் வில்இலக - ஏருடைய 19 எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும் கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் - கொண்டு 20 கடிசூத் திரம்புனைந்து, கங்கணம்கைப் பெய்து வடிவுடைய கோலம் புனைந்தாங்கு - அடிநிலைமேல் 21 இறைவன் புறப்பாடு நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர் 22 எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும் அண்ணல்மேல் ஆசிகள் தாம்உணர்த்த - ஒண்ணிறத்த 23 பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் - பொன்னியலும் 24 அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண் 25 நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏத்த வருணன் மணிக்கலசந் தாங்கத் - தெருவெலாம் 26 வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத் தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர் 27 ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய 28 உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன் திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த 29 கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள் பொங்கு கவரி புடைஇரட்டத் - தங்கிய 30 பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக 31 மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மோகத்(து) உருமு முரசறையப் - போகம்சேர் 32 தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான் 33 விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு - எண்ணார் 34 கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் - செருக்குடைய 35 சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத 36 அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் - மன்னிய 37 மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் - ஏல்வுடைய 38 சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான் 39 காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர் 40 வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்தச் சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல் 41 மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய 42 விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் - எச்சார்வும் 43 சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லிலயத் 44 தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 45 குடமுழவம் கொக்கரை, வீணை, குழல்யாழ் இடமாம் தடாரி படகம் - இடவிய 46 மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு)இவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப, - ஒத்துடனே 47 மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய 48 ஆறாம் இருதுவும், யோகும், அருந்தவமும் மாறாத முத்திரையும், மந்திரமும், - ஈறார்ந்த 49 காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும் வால கிலியரும் வந்தீண்டி - மேலை 50 இமையோர் பெருமானே போற்றி! எழில்சேர் உமையாள் மணவாளா போற்றி - எமைஆளும் 51 தீயாடி போற்றி! சிவனே அடிபோற்றி! ஈசனே, எந்தாய், இறைபோற்றி! - தூயசீர்ச் 52 சங்கரனே போற்றி! சடாமகுடத் தாய்போற்றி! பொங்கரவா பொன்னங் கழல்போற்றி! - அங்கொருநாள் 53 ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி! - தூய 54 மலைமேலாய் போற்றி! மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி! - நிலைபோற்றி 55 போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக, - ஏற்றுக் 56 கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக் - கடிகமழும் 57 பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே 58 மகளிர் குழாங்கள் வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்) 59 வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ(டு) ஊனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா 60 வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய 61 மாட நடுவில் மலர்ஆர் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில் 62 சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும் 63 கூழைபின் தாழ, வளைஆர்ப்பக், கைபோந்து கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் - சூழொளிய 64 கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழ்நற் 65 பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகைப்புனைந்து - பொற்புடைய 66 பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர் 67 சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின் 68 மேல்ஏறி நின்று தொழுவார்; துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் - நூலேறு 69 தாமமே தந்து சடாதாரி நல்கானேல், யாமமேல் எம்மை அடும்என்பார் - காமவேள் 70 ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார்; கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார்; - பூமன்னும் 71 பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார்; - முன்னம் 72 ஒருகண் எழுதிவிட்(டு) ஒன்றெழுதா தோடித் தெருவம் புகுவார்; திகைப்பார்; - அருகிருந்த 73 கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார்; - அண்ணல்மேற் 74 கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார்; - ஒண்ணிறந்த 75 1. பேதை பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள்; - தீதில் 76 இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள்; நலஞ்சேர் உடையாலும் உள்உருக்க கில்லாள்; - நடையாலும் 77 கௌவைநோய் காளையரைச் செய்யாள்; கதிர்முலைகள் வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள்; - செவ்வன்நேர் 78 நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின் வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்; - பூங்குழலும் 79 பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள்; - நாடோறும் 80 ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினளாஞ்சேயிழையாள் - நன்றாகத் 81 தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்தெடுத்துக் கோலஞ்சேர் 82 பந்தரில் பாவைகொண்(டு) ஆடுமிப் பாவைக்குத் தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர் 83 ஈசன் எரியாடி என்ன அவனைஓர் காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் - தாய்சொல் 84 இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல் நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய 85 2. பெதும்பை பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள் காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் - சீரொளிய 86 தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு காமருவு கெண்டை,ஓர் செந்தொண்டை, - தூமருவு 87 முத்தம் முரிவெஞ் சிலை,சுட்டி, செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த 88 கங்கணம் சேர்ந்திலங்கு கையாள், கதிர்மணியின் கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழ்நல் 89 அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள், ஆய்பொதியில் சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் - வந்து 90 திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள் கடல்பட்ட இன்னமுதம் அன்னாள், - மடல்பட்ட 91 மாலை வளாய குழலாள், மணம்நாறு சோலை இளங்கிளிபோல் தூமொழியாள், - சாலவும் 92 வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்(கு) அஞ்சனத்தை யிட்டங்(கு) அழகாக்கி - எஞ்சா 93 மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணிஆர் வளைதோள்மேல் மின்ன - மணியார்ந்த 94 தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க் காமன் உருவம் வரவெழுதிக் - காமன் 95 கருப்புச் சிலையும் மலர்அம்பும் தேரும் ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் - விருப்பூரும் 96 தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர 97 நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும் நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் - நன்றாகக் 98 கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட 99 3. மங்கை மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய 100 அங்கை கமலம்; அடிகமலம்; மான்நோக்கி கொங்கை கமலம்; முகம்கமலம் - பொங்கெழிலார் 101 இட்டிடையும் வஞ்சி; இரும்பணைத்தோள் வேய்எழிலார் பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு - மட்டுவிரி 102 கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர் 103 வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள் 104 காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து, - மாதராள் 105 பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏவ்வைக்கண் - நற்கோட்டு 106 வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர் 107 தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான் 108 தார்நோக்கும் தன்தாரும் நோக்கும்; அவனுடைய ஏர்நோக்கும்; தன்ன தெழில்நோக்கும்; - பேரருளான் 109 தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும்; அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண்நோக்காது 110 உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய 111 4. மடந்தை தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர் 112 ஈசன் சிலையும், எழில்வான் பவளமும், சேய்வலங்கை வேலும், திரள்முத்தும் - பாசிலைய 113 வஞ்சியும், வேயும், வளர்தா மரைமொட்டும், மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப் 114 புருவமும், செவ்வாயும், கண்ணும் எயிறும் உருவ நுகப்பும்மென் தோளும், - மருவினிய 115 கொங்கையும், வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர் பங்கயப் போதனைய சேவடியாள்; - ஒண்கேழல் 116 வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர் ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள்; - ஊழித் 117 திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய 118 முத்தாரம் கண்டத் தணிந்தாள்; அணிகலங்கள் மொய்த்தார வாரம் மிகப்பெருகி - வித்தகத்தால் 119 கள்ளுங், கடாமுங், கலவையுங் கைபோந்திட்டு உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய 120 காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும் 121 தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்(கு) - ஒண்ணுதலாள் 122 தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னும்ஓர் காமரம் யாழமைத்து - மன்னும் 123 விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு - அடல்வல்ல 124 வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்(கு) எஞ்ஞான்றும் மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல 125 மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணிஏறு தோளானைக் கண்டாங்(கு) - அணியார்ந்த 126 கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள் 127 எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம் நல்லாய் படுமேற் படுமென்று - மெல்லவே 128 செல்ல லுறும்;சரணம் கம்பிக்கும்; தன்னுறுநோய் சொல்லலுறும்; சொல்லி உடைசெறிக்கும்; - நல்லாகம் 129 காண லுறும்;கண்கள் நீர்மல்கும்; காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது; - பூணாகம் 130 புல்லலுறும் ‘அண்ணல்கை வாரான்’என் றிவ்வகையே அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள் 131 தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி 132 5. அரிவை செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழ்நல் 133 திங்களும், தாரகையும், வில்லும், செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் - பொங்கொளிசேர் 134 மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்ஆவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும் 135 “இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்”பென்னும் - சொல்லாலே 136 அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர் 137 இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை அன்னத்தை வென்றாள்; - அடியிணைமேல் 138 பாடகம் கொண்டு பரிசமைத்தாள்; பன்மணிசேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள்; - கேடில்சீர்ப் 139 பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள்; - பொன்னனாள் 140 இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் - முன்னமே 141 பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய 142 இன்னிசையும், இப்பிறப்பும், பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையையுங் கைவிட்டுப் - பொன்னனையீர் 143 இன்றன்றே காண்ப(து) எழில்நலங் கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்(கு)என்று - சென்றவன்தன் 144 ஒண்களபம் ஆடும்; ஒளிவாள் முகத்திரண்டு கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழ்நல் 145 கூந்தல் அவிழ்க்கும்; முடிக்கும் கலைதிருத்தும்; சாந்தம் திமிரும் முலையார்க்கும் - பூந்துகிலைச் 146 சூழும்; அவிழ்க்கும்; தொழும்அழும் சோர்துயருற்(று) ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் - சூழொளிய 147 அங்கை வளைதொழுது காத்தாள்; கலைகாவாள்; நங்கை இவளும் நலம்தோற்றாள்; - அங்கொருத்தி 148 6. தெரிவை ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள்; - ஓரா 149 மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும் இருள்தீர் புலரியே ஒப்பாள்; - அருளாலே 150 வெப்பம் இளையவர்கட்(கு) ஆக்குதலால் உச்சியோ(டு) ஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்(து) 151 அந்தளிர்போற் சேவடியும், அங்கையும் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள்; - அந்தமில் 152 சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள்; - சீராரும் 153 கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங் காரின் சவிகொண்டாள்; - வண்ணஞ்சேர் 154 மாந்தளிர் மேனி; முருக்கிதழ்வாய்; ஆதலால், வாய்ந்த இளவேனில் வண்மையாள்; - மாந்தர் 155 அறிவுடையீர் நின்மின்கள்; அல்லார்போம் என்று பறையறைவ போலும் சிலம்பு - முறைமையால், 156 சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல் ஓரா தகலல் உறாதென்று - சீராலே 157 அந்துகிலும், மேகலையும், சூழ்ந்தாள்; அணிமுலைகள் மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே 158 பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர் 159 நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும் 160 காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன் தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும் 161 ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும் கோகிலமும் போலும் குணத்தினா - ளாகிப் 162 பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி அலர்சுமந்து கூழைய வாகிக் - கலைகரந்(து) 163 உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து கள்ஆவி நாறும் கருங்குழலாள் - தெள்ளொளிய 164 செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார் 165 பொற்கவற்றின், வெள்ளிப் பலகை மணிச்சூது நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகரும் 166 தோளான், நிலைபேறு, தோற்றம், கேடாய்நின்ற தாளான் சடாமகுடம் தோன்றுதலும், - கேளாய 167 நாணார் நடக்க; நலத்தார்க் கிடையில்லை; ஏணார் ஒழிக; எழிலொழிக; - பேணும் 168 குலத்தார் அகன்றிடுக; குற்றத்தார் வம்மின்; நலத்தீர் நினைமின்நீர் என்று - சொலற்கரிய 169 தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது - போவானேல், 170 கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாங்கு 171 7. பேரிளம்பெண் பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் - மண்ணின்மேல் 172 கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே வுளவென்று - பண்டையோர் 173 கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல் விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம் 174 அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் - எஞ்சாத 175 பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி வைத்தன போல வளர்ந்தே ந்தி - ஒத்துச் 176 சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்(கு) அணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த 177 கொங்கையாள், கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம் நங்கையாள், நாகிளவேய்த் தோளினாள்; - அங்கையால் 178 காந்தட் குலம்பழித்தாள்; காமவேள் காதலாள்; சாந்தம் இலங்கும் அகலத்தாள்; - வாய்ந்துடனே 179 ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்தச் செழும்பவளம் - காய்ந்திலங்கு 180 முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து 181 வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள் உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய 182 தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால் வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த 183 குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப 184 யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல் வாசிகை கொண்டு வடிவமைத்தாள்; - மாசில்சீர்ப் 185 பாதாதி கேசம் பழிப்பிலாள்; பாங்கமைந்த சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள்; - மாதார்ந்த 186 பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர் வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழ்நல் 187 கண்அவனை அல்லாது காணா செவியவன(து) எண்ணருஞ்சீர் அல்ல(து) இசைகேளா - அண்ணல் 188 கழலடி யல்லது கைதொழா அஃதால் அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் - றெழிலுடைய 189 வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் 190 அரிஅரணஞ் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில் 191 ஆடும் இறைவன், அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர் 192 வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே 193 வந்தாய்; வளைகவர்ந்தாய்; மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவுஎன்று - நொந்தாள்போல் 194 கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் 195 பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ஆர வாரம் பெரிதன்றே - விண்ணோங்கி 196 மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு. 197 காப்பு பெண்ணீர்மை காமின்; பெருந்தோளி ணைகாமின்; உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக் காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன் ஊரேறு போந்த துலா. திருச்சிற்றம்பலம் திருக்கைலாய ஞான உலா முற்றிற்று |